சென்னை: ராக்கெட்ரி படத்துக்காக மும்பையிலுள்ள வீட்டை விற்றதாக வந்த தகவல் குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையாக மாதவன் நடிப்பில் உருவான படம் ராக்கெட்ரி. இந்த படத்தை இயக்கி, மாதவனே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தின் பட்ஜெட் அதிகமானதால் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது வீட்டை மாதவன் விற்று விட்டதாக நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் மாதவன் சோகத்தில் இருக்கிறார் என்றும் அந்த நபர் குறிப்பிட்டார்.