நாட்டார் மங்கலத்தில் விஜயதசமி பண்டிகை : பெருமாள் வீதி உலா

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை   முன்னிட்டு  பெருமாள் சுவாமி  திருவீதி உலா  நடைபெற்றது.  ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை   முன்னிட்டு  ஸ்ரீ பெருமாள்   கோயிலில் சிறப்பு  வழிபாடு  நடைபெற்றது. இதில் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் முக்கிய சிறப்பு நிகழ்வாக பெருமாள் கோயில் முன்பு தென்னங்கிற்றில் பந்தல் அமைந்து வாழைமரம் கட்டி அதற்கு  சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அம்பு போட்ட பின்பு இரவு ஸ்ரீ வரதராஜ் கம்பபெருமாள் சுவாமியானது அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைப்பெற்றது. கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு  சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்துவழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: