வேட்டவலம்: வேட்டவலம் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவரத்திரி விழா கோலகலமாக துவங்கியது. வேட்டவலம் பெரியார் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நவராத்திரி விழா கோலகலமாக துவங்கியது. இக்கோயிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டப்படுவது வழக்கம். அதன்படி கோயில் வளாகத்தில் விநாயகர், சரஸ்வதி, துர்கை முதலான சுவாமிகளுக்கு பல வகையான அழகு பொம்மைகள் கொலுவில் வைத்து, பூஜை செய்யப்பட்டது.