18 வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கி நடந்து வருகிறது. ஜுலை மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.