பாலா சூர்யா இணைந்துள்ள படம் ஓடிடியில் வெளியாகிறது

18 வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம்  தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கி நடந்து வருகிறது. ஜுலை மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், அதர்வா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா காது கேட்காத, வாய் பேச முடியாத மீனவர் ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த படம் பிரபல ஓடிடி தளத்திற்கென்றே தயாராகிறதாம். ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யா வெளியிடவில்லை.

Related Stories: