செய்யாறு: செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளியை பக்தர்கள் கண்டு வணங்கினார்கள். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரசங்குப்பம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று மூலவர் காசி விஸ்வநாதர் மீது காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது, சுவாமிக்கு சூரிய பகவான் அபிஷேகம் நிகழ்த்துவதாக கருதி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள்.