தமிழில் மீண்டும் ஆஷா சரத்

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள அன்பறிவு படத்தில், அம்மா வேடத்தில் நடித்திருந்தார் ஆஷா சரத். மலையாள நடிகையான இவர், தமிழில் பாபநாசம், பாக்மதி உள்ளிட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். தமிழில் மீண்டும் நடிக்க வந்தது குறித்து ஆஷா சரத் கூறியது: தமிழ்த் துறையில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும்  அங்கீகாரத்தை காண மகிழ்ச்சி அளிக்கிறது. த்ரிஷ்யம் படத்தொடர்  எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு நல்ல கேரக்டரை வழங்கினார். அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன்  தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எனது நடிப்பை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் பாராட்டிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது, அன்பறிவு படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியுள்ளது என்கிறார். தொடர்ந்து இதேபோல் அனைத்துவித கேரக்டர்களிலும் நடிக்க ஆஷா சரத் தயாராக உள்ளாராம். தற்போது அவர் மலையாளத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார். இவரது மகளும் விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

Related Stories: