ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள அன்பறிவு படத்தில், அம்மா வேடத்தில் நடித்திருந்தார் ஆஷா சரத். மலையாள நடிகையான இவர், தமிழில் பாபநாசம், பாக்மதி உள்ளிட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். தமிழில் மீண்டும் நடிக்க வந்தது குறித்து ஆஷா சரத் கூறியது: தமிழ்த் துறையில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரத்தை காண மகிழ்ச்சி அளிக்கிறது. த்ரிஷ்யம் படத்தொடர் எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு நல்ல கேரக்டரை வழங்கினார். அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.