சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு: ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் எதற்கும் துணிந்தவன். சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இமான் இசையமைக்கிறார். பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வரும் பிப்ரவரி 4ம் தேதி திரைக்கு வருகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டபோது, ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். இந்நிலையில் படத்தின் முதல் பாடல் கடந்த 15ம் தேதி மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ‘வாடா தம்பி’ என தொடங்கும் இந்த பாடலை இமான் இசையில் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார்.

இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ் இணைந்து பாடினர். சூர்யாவின் குத்து டான்ஸ் உடன் துள்ளலான பாடலாக இது உருவாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடல் நேற்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. யுகபாரதி எழுதிய, ‘‘உள்ளம் உருகுதய்யா’’ என்ற இந்த பாடலை பிரதீப்குமார், வந்தனா சீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் பாடியிருந்தனர். இமான் இசையில் மனதை கொள்ளைகொள்ளும் மெலடி பாடலாக இது உருவாகியிருந்தது. நேற்று மாலை இந்த பாடல் வெளியானதும், இணையதளத்தில் வைரலானது. இந்த பாடலுக்கான லிங்கை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கினர்.

Related Stories: