மலையாள நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தமிழில் நடிக்க அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காரணம், இங்கு அதிக சம்பளம், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, படப்பிடிப்பில் கேரவன், உதவியாளர்களுக்கு சம்பளம் போன்ற பல சலுகைகள் கிடைப்பதுதான். அவரது நடிப்பில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், தீதும் நன்றும், சூரரைப்போற்று ஆகிய படங்கள் வெளியானது. தற்போது ஆர்ஜே பாலாஜியுடன் வீட்ல விசேஷங்க, கார்த்தியுடன் ஒரு படம், அசோக் செல்வனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
