பாலிவுட் மூத்த நடிகை சல்மா ஆகாவின் மகளும், நடிகையும், பாடகியுமான ஜாரா கான், அவுரங்கசீப் மற்றும் தேசி கட்டே ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கடந்த நவ. 6ம் தேதி பெண் ஒருவர் கொலை மிரட்டல் மற்றும் ஆபாச செய்திகளை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ஜாரா கான், சம்பந்தப்பட்ட பெண் மீது மும்பையில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் கொலை மிரட்டல் விடுத்த தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி மாணவியை கைது செய்துள்ளனர்.