கடந்த வாரம் பெய்த கனமழையால் தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. ஏழை மக்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கிறார்கள். வெள்ள நிவாரணத்துக்கு 550 கோடி ரூபாய் வேண்டும். திரைப்பட நட்சத்திரங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு நிதி தந்து உதவ வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.