யுனிசெப் அமைப்பில் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக நடிகை திரிஷா இருக்கிறார். குழந்தை திருமணம், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து இணையதளம் வழியாக யுனிசெப் களப் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா காலத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொண்ட பணியாளர்களை பாராட்டுகிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கும், தொன்றுதொட்ட கலாசாரமாய் இருந்துவரும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகவும் நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.