எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்ததும் இசையமைப்பாளர்கள் பெரும்பாலானோர் இடிந்து போயினர். அவர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். சினிமாவில் ரோஜா படம் மூலம் ரஹ்மான் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எஸ்.பி.பிதான் பாடியிருந்தார். தொடர்ந்து ரஹ்மான் இசையில் பல பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார். எஸ்.பி.பி எத்தனையோ முறை இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்தியிருக்கிறார். அதேபோல் ரஹ்மானும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஆனால் இருவரும் சேர்ந்து முழு நீள இசை நிகழ்ச்சியை நடத்தியதில்லை. எஸ்.பி.பி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அதற்காக ஒரு திட்டம் வைத்திருந்தார் ரஹ்மான்.