அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறனுக்கு கோலிவுட்டில் மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து 4 படங்கள் இயக்க அவர் தேர்வாகியுள்ளார். இதில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கிறார். படத்துக்கு வாடிவாசல் என தலைப்பு வைத்துள்ளனர். மற்றொரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். 4வது படம்தான் யாரும் எதிர்பாராதது. அதாவது, விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க முன்பே வெற்றிமாறன் பேசியிருந்தார். அந்த படம்தான் அவரது 4வது படமாக இருக்கும் என கூறப்படுகிறது.