டிக்-டாக் காதலன் அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டியதால் டிவி சீரியல் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் வசித்து வருபவர் ஸ்ராவணி. தெலுங்கு டிவி சீரியல் நடிகை. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ராவணியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.ஆர்.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறியதாவது: ஸ்ராவணி கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை சேர்ந்த தேவராஜ் என்ற இளைஞருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் பழகிவந்தார். இருவரும் வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ராவணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.