வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த நடிகை

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் பிடித்தார். அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், தும்பா படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக கோகுல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அருண் பாண்டியனுக்கு சொந்தமான பண்ணை வீடு, பாளையங்கோட்டை அருகில் எட்டேரியில் உள்ளது. 

இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் பாம்பை பார்த்து பயந்தனர். அருண் பாண்டியனின் மகளான நடிகை கீர்த்தி, பாம்பை தனது கையிலேயே பிடித்தார். பிறகு ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு அதை அடைத்துவிட்டார். அந்த பக்கெட்டை வீட்டுக்கு வெளியே வைத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பாம்பை பிடித்து சென்றனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: