அறிகுறி இன்றி கொரோனா குடும்பத்தோடு அட்மிட் ஆன நடிகை

பிரபுதேவா நடித்த பாலிவுட் படமான ‘ஏபிசிடி’யில் நடித்தவர், மோகனா குமாரி சிங். பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள இவர், தற்போது இந்தி தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார்.கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மோகனா குமாரி சிங் தனது குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவரது மாமியாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மோகனா குமாரி சிங் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடைசி நிமிடம் வரை எந்தவித அறிகுறியும் இல்லாமல் அனைவருக்குமே கொரோனா தொற்று இருந்தது, மருத்துவர்களையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related Stories: