2 குழந்தைக்கு தாய் ஆனதில் சமீரா குதூகலம்

வாரணம் ஆயிரம், வேட்டை, போன்ற படங்களில் நடித்த சமீரா ரெட்டி கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு தொழில் அதிபர் அக்‌ஷய் வரதே என்பவரை மணந்துகொண்டார். சமீபத்தில் தனது 2வது குழந்தையை  சமீரா பெற்றார். 2வது குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பிணியாக இருந்த சமீரா தனது புகைப்படங்களை அடிக்கடி நெட்டில் வெளியிட்டதுடன் நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சில தினங்களுக்கு முன் வெளியிட்ட மெசேஜிலும் ெராம்பவும் ரிலாக்ஸாக உணர்கிறேன், தாய்மையை அனுபவிக்கிறேன் என வெளிப்படுத்தினார்.

2வது குழந்தை பெற்றதற்கு பிறகு இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை சமீராவே வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது: இந்த முறை நான் தாய்மை அடைந்ததற்கு மகிழ்ச்சியாக இருப்பதுபற்றி கேட்கிறார்கள். ஏனென்றால் கடந்தமுறை தாய்மை அடைந்தபோது ஒரு பொறிக்குள் சிக்கியதுபோல் உணர்ந்தேன். பலர் பலவித கட்டுப்பாடுகள் சொன்னார்கள். கர்ப்பமான தோற்றத்தில் என்னை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற உணர்வு வாட்டியது.

எனக்குள் ஒரு விதமான பயம், பதற்றம் தொற்றிக் கொண்டு என் சந்தோஷத்தை குலைத்தது. மிகவும் டென்ஷனாக உணர்ந்தேன். என்ன இது? ஏன் இப்படி? என்றெல்லாம் மனதிற்குள் பல்வேறு உணர்வுகள் வந்துபோய்க்கொண்டிருந்தன. அது மிகவும் கடினமான தருணமாக உணர்ந்தேன். இம்முறை அத்தகைய உணர்வுகளை தள்ளிவைக்க முடிவு செய்தேன்.

மிகவும் மகிழ்ச்சியாக எனது ஒவ்வொரு தருணத்தை வடிவமைத்தேன். நேர்மையான ஒரு தாய்மை உணர்வு இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டேன். மற்றவர்கள் வெளியில் பார்க்கும்போது அழகாக இருக்கிறோமா என்றில்லாமல் தாய்மையின் அழகை ரசித்தேன். ஸ்டைலான வாழ்க்கையை கடைபிடித்தேன். அந்த உணர்வு தற்போது மகிழ்ச்சியும் சந்தோஷமும் குழந்தை பெற்றெடுத்த பிறகும் தொடர்கிறது. இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

Related Stories: