ரூ.2 கோடி வருமானம் உதறியது ஏன்?....நடிகை சாய் பல்லவி பதில்

நடிகர், நடிகைகளில் மற்றும் பிரபலங்கள் என அதிக சம்பளம் பெறும் நட்சத்திரங்கள், பிரபலங்கள் பற்றி ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் இதழ் பட்டியல் வெளியிட்டு வருகிறது. தற்போது மற்றொரு புதிய அம்சமாக 30 அன்டர் 30 பிரபலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது. 30 வயதுக்குள் சாதித்த 30 பேர் என்ற பட்டியலாக வெளியாகி இருக்கும் இதில் நடிகை சாய் பல்லவியும் இடம் பிடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது,’போர்ப்ஸ் 30 அன்டர் 30 பட்டியலில் நான் இடம் பெற்றிருப்பதற்காக எனது மகிழ்ச்சியையும் பெருமையையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

‘கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்?’ என்றதற்கு பதில் அளித்தார் சாய்பல்லவி. அவர் கூறும் போது, ‘அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு ெபரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் 3 சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான்.

‘தோல் நிறம் பற்றி சிலர் பேசுகிறார்கள். வெளிநாட்டினரிடம் சென்று நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள், அப்படியிருந்தால் அதனால் கேன்சர் வரும் என்று கூற முடியுமா? அது அவர்களுடைய நிறம் அவ்வளவுதான்’ என்றார். ஏற்கனவே சாய்பல்லவி ரூ.1 கோடி சம்பளத்துடன் வந்த ஆடை விளம்பர வாய்ப்பிலும் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: