தனி ஒருவன் இயக்குனர் மோகன்ராஜா தற்போது நடிகராகவும் மாறியிருக்கிறார். விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மோகன்ராஜா. புதிய படம் இயக்குவது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார் மோகன்ராஜா. இந்நிலையில் பிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாக உள்ளது.