ஸ்ரீதேவி கல்லறை அருகே என்னை தகனம் செய்யுங்கள்; இயக்குனர் வர்மாவின் கடைசி ஆசை

பிரபலங்களை பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறி வருவதுடன் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி அடிக்கடி பிரச்னைகளில் சிக்கிக்கொள்பவர் ராம் கோபால் வர்மா. தமிழ், தெலுங்கில் சூர்யா நடிப்பில் உருவான ரத்த சரித்திரா, இந்தியில் ரங்கீலா, லட்சுமி என்டிஆர் (தெலுங்கு) போன்ற பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். இவர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதை கைவிடுவது எப்போது என்று கேட்கிறார்கள். நான் அப்படி செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் எதிர்பார்க்கிறார்கள். அதுபோன்ற படங்கள் எடுப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். எனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க என்னிடம் யாரும் அனுமதி பெறவேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

வாழ்வில் ஒரு மணி நேரம்தான் எனக்கு உயிர் வாழ வாய்ப்புள்ளது என்றால் அந்த ஒரு மணிநேரத்தை நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில் வாழ ஆசைப்படுகிறேன். எனது கடைசி ஆசை ஸ்ரீதேவியின் உடல் அருகே எனது உடலை தகனம் செய்ய வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு எடுப்பீர்களா என்கிறார்கள். அவரது வாழ்க்கையை பற்றி படம் எடுப்பது மிகவும் கடினம். இவ்வாறு ராம் கோபால் வர்மா கூறினார்.

Related Stories: