தனிமையில் ‘ஷாம்பெயின்’ அருந்திய காஜல்

ஒரு காரியம் வெற்றி அடைந்தால் பெரிய இடங்களில் ஷாம்பெயின் ஓபன் செய்து அதை நெருக்கமானவர்களுடன் அருந்தி மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள். ஆனால் காஜல் அகர்வால் திடீரென்று தனிமையில் ஒரு ஆற்றின் கரையோரம் சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி சேரில் அமர்ந்துகொண்டு ஷாம்பெயின் ஆர்டர் செய்து அருந்தினார்.

தொழில் அதிபருடன் காதல் ஏற்பட்டிருப்பதையடுத்து விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக காஜலைப்பற்றி சமீபமாக நிறைய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் சிங்கிள்தான் என்பதை உணர்த்தும் வகையில் தனிமையில் அமர்ந்து ஷாம்பெயின் அருந்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: