பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கை தொடங்கிய மணிரத்னம்

தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், மோகன்பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 800 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே படத்துக்கான லொகேஷன் தேர்விலும் படக்குழு மும்முரமாக இருந்தது.

இந்நிலையில் இன்று தாய்லாந்து காடுகளில் முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 40 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.

Related Stories: