குழந்தை பிறக்கும் தேதி சொல்லட்டுமா? நெட்டிஸன்களிடம் சமந்தா கடு கடு

பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்து வந்த நடிகை சமந்தா டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும் ஹீரோயினாக நடிப்பை தொடர்கிறார். ஆனால் திருமணமாகி 2 வருடம் ஆகியும் அவர்  குழந்தை பெற்றுக்கொள்ளாமலிருப்பது பற்றி  அவரிடம் கேட்ட வண்ணமிருந்தனர். பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தநிலையில் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டு வந்தார்.

இந்த வருடம் குழந்தை பெற்றுக்கொள்வார் என்ற தகவல்கள் பரவிய நிலையில் அவரோ கைநிறைய படங்களும், வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் ரசிகர்கள் அப்செட் ஆகினர். சமந்தாவை வம்பிழுத்த சில நெட்டிஸன்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று கேட்ட வண்ணமிருந்தனர்.

நேரம் வரும்போது சொல்கிறேன் என்று பலமுறை பதில் அளித்தார். ஆனால் அவரை யாரும் விட்ட பாடில்லை. தினமும் இதுபோன்று கேள்வி கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதில் கோபம் அடைந்தார் சமந்தா. இதுபற்றி சமந்தா கூறும்போது,’ ‘ குழந்தைதானே... 2022 ஆகஸ்ட் 7ம்தேதி 7 மணிக்கு பெற்றுக்கொள்வேன் போதுமா’ என கடு கடு பதில் அளித்தார்.

Related Stories: