சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய கரிசல் என்ற நாவல் படமாகிறது. காமராஜ், அய்யா வழி, நதிகள் நனைவதில்லை ஆகிய படங்களை இயக்கிய நாஞ்சில் அன்பழகன் இயக்கி, வைகுண்டா சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். அவர் கூறுகையில், ‘முரளி நடிப்பில் இயக்க திட்டமிட்டு இருந்தேன். அவரது திடீர் மறைவால் அது நடக்கவில்லை. இப்போது முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பிரமாண்டமாக உருவாக்குகிறேன்’ என்றார்.