பாலிவுட்டில் நான் ஊனமுற்றவன்: ஏ.ஆர்.முருகதாஸ் சொல்கிறார்

சென்னை: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியது: எனது தாய்மொழியான தமிழில் படங்களைச் செய்வது எனது மிகப்பெரிய பலம், ஏனென்றால் இங்கு என்ன மாதிரி படம் தந்தால் ஒர்க்அவுட் ஆகும் என்பது எனக்குத் தெரியும். சமூக ஊடகங்களில் பிரபலமான வசனங்கள் மற்றும் உரையாடல்கள் சினிமாவில் இளைஞர்களை ஈர்க்கப் பயன்படும். மற்ற மொழிகளில் அப்படி இல்லை. எனது ஸ்கிரிப்ட் மற்றும் திரைக்கதையை மட்டுமே நான் நம்ப முடியும்.

தெலுங்கு ஓரளவு பரவாயில்லை. ஆனால் இந்தியைப் பொறுத்தவரை, எனக்கு எதுவும் புரியவில்லை. நான் ஸ்கிரிப்டைக் கொடுக்கிறேன், அது பின்னர் ஆங்கிலத்திலும் பின்னர் இந்தியிலும் மொழி பெயர்க்கப்படுகிறது. ஒரு காட்சியில் என்ன நடக்கிறது என்பது பற்றிய பொதுவான யோசனை எனக்கு உள்ளது. ஆனால் நுணுக்கங்களை நான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்தி படங்களில் பணிபுரியும் போது நான் ஊனமுற்றவனாக உணர்கிறேன். இவ்வாறு முருகதாஸ் கூறினார். இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் கஜினி, அக்‌ஷய் குமார் நடிப்பில் ஹாலிடே, சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படங்களை அவர் இயக்கியுள்ளார்.

Related Stories: