ஏரியை தூர் வாரும் ஹீரோ

தமிழ், கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் யஷ். இப்படம் அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. அடுத்து கேஜிஎஃப் படத்தின் 2ம் பாகம் வரவிருக்கிறது. ஏரியை தூர் வாருங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம், குட்டை, கால்வாய் பகுதிகளை சீர் செய்ய வேண்டும் என்று பல நடிகர்கள் யோசனை கூறி வருகின்றனர். யோசனை சொல்லிக்கொண்டிருந்தால் வேலைக்காகாது என எண்ணிய யஷ் களத்தில் இறங்கினார். அவருக்கு மனைவி ராதிகா பண்டிட் உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

கர்நாடகாவில் மாண்டியா, பிதார் பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர் வாருவதுடன், நீர்பிடிப்பு பகுதிகளில் டேங்குகள் அமைக்க திட்டமிட்டிருக்கிறார். கால்வாய்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் புதிய ஏரிகளை தோண்டுதல், வறண்டு கிடக்கும் ஏரிகளில் தண்ணீர் நிரப்புவது போன்ற பணிகளை செய்யவும் தனது அமைப்பினரை முடுக்கி விட்டிருக்கிறாராம் யஷ்.

Related Stories: