கார்த்தியின் சகோதரியாகும் ஜோதிகா

சூர்யாவை காதலித்து மணந்த ஜோதிகா, குடும்பத் தலைவியாக இல்லறத்தை நல்லறமாக நடத்தி வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். எந்தவிதத்திலும் குடும்ப தலைவி இமேஜ் பாதிக்காத வகையில் தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து மற்றொரு தமிழ் படம் இயக்குகிறார். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார்.

இருவரும் என்ன வேடம் ஏற்கிறார்கள் என்பதை இயக்குனர் சொல்லாவிட்டாலும் அவர்கள் உடன்பிறந்தவர்களாக நடிக்கவிருப்பதாக பட தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணி ஜோதிகாவுடன் நடிக்க உள்ளதுபற்றி கார்த்தி கூறும்போது,’ முதன் முறையாக என் அண்ணியுடன் (ஜோதிகா) படத்தில் நடிப்பது மிகவும் த்ரில்லாக இருக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சத்யராஜ் சார் எங்களுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறார்’ என்றார்.

Related Stories: