சூர்யாவை காதலித்து மணந்த ஜோதிகா, குடும்பத் தலைவியாக இல்லறத்தை நல்லறமாக நடத்தி வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். எந்தவிதத்திலும் குடும்ப தலைவி இமேஜ் பாதிக்காத வகையில் தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து மற்றொரு தமிழ் படம் இயக்குகிறார். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார்.