சமந்தாவுக்கு அவரது பெற்றோருடன் தகராறு என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது. அதற்கெல்லாம் விடைகொடுக்கும் வகையில் தனது தாய் குறித்து சமந்தா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில்,’எனது தாய் செய்யும் பிரார்த்தனையில் எப்போதும் நான் நம்பிக்கை கொண்டிருப்பேன். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் மேஜிக் செய்திருக்கிறது. சிறுமியாக இருந்த போது எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் நான் கேட்பேன். இப்போதும் அப்படித்தான் கேட்கிறேன்.