ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. அப்போதே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது படத்தில் ரஜினி போலீசாக நடித்திருந்தார். அந்த படம் 1988ல் வெளியானது. 30 வருடம் கழித்து மீண்டும் இப்போது அவர் போலீஸ் கேரக்டரில் இதில் நடிக்கிறார்.