கார்த்தியுடன் பருத்திவீரன் படத்தில் இணைந்து நடித்தார் பிரியாமணி. அப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரியாமணிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் ஒரு சில படங்களே ஒப்புக்கொண்டு நடித்து வந்தார். அவருக்கு வந்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பருத்திவீரனில் இடம்பெற்ற கிராமத்து பெண் வேடமாகவே இருந்ததால் அந்த வேடங்களை அவர் ஏற்க மறுத்தார். நவநாகரீக பெண்ணாக கிளாமர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்தார். இதனால் தமிழ் படங்களை ஓரம்கட்டிவிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் முஸ்தபா ராஜை திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் செட்லானார். திருமணத்துக்கு பிறகும் பிரியாமணி தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த ஆண்டில் கன்னடம், மலையாளம், தெலுங்கு என 5 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படமும் அடங்கும். சமீபத்தில் பிரியாமணியை அணுகிய சமூக சேவை அமைப்பு ஒன்று பெண்களுக்கான சுகாதாரம், மாதவிலக்கு பற்றி2ய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனை பிரியாமணி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.