45 வருடத்துக்கு பின் 2ம் பாகம்; காமெடி நடிகர்கள் இணைகின்றனர்

திரைப்படங்கள் வெற்றிபெற்றால் அந்த வெற்றியை மீண்டும் சுவைக்க 2ம் பாகம், 3ம் பாகம் படங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழில் 1973ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் காசியாத்திரை. சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு அப்படத்தின் 2ம் பாகம், ‘காவி ஆவி நடுவுல தேவி’ பெயரில் தற்போது உருவாகிறது. மறைந்த இயக்குனர் ராம நாராயணனின் படங்களுக்கு வசனம் எழுதி, பக்தி படங்களையும் இயக்கி உள்ள புகழ்மணி இப்படத்தை இயக்குகிறார்.

அவர் கூறியதாவது: பக்தி, திகில் கலந்த படமாக உருவாகும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, சிங்கமுத்து, சிங்கம்புலி, ரோபோ சங்கர், கிங்காங், போண்டாமணி என அனைத்து நகைக்சுவை நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர்.

இவர்களுடன் 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஹீரோவாக புதுமுகம் அறிமுகமாகிறார். வி.சி.குகநாதன் கதை எழுதுகிறார். இதன் படப் பிடிப்பு நடந்து வருகிறது. மனோஸ் சினி கம்பைன்ஸ் தயாரிக்கிறது. ஆஞ்சநேயர், ஐந்து தலை நாகம், அம்மன் ஆவி சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் பல்கேரியா, ஹாலந்து ஆகிய நாடுகளில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: