ஐபிஎல் டான்ஸ் நிகழ்ச்சி புறக்கணிப்பா? ஜாக்குலின் மீது புகார்

மும்பை: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கவுகாத்தியில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் டான்ஸ் ஆட மறுத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாலிவுட்டில் பிரபலமாக உள்ளார். ஐபிஎல்-லில் கொல்கத்தா – ராஜஸ்தான் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறும் என்பதால், இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் ஜாக்குலின் நடனம் ஆடுவதாக இருந்தது. ஆனால் இதில் பங்கேற்க முடியாது என ஜாக்குலின் கூறியுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இது பற்றி பேசிய ஜாக்குலின், ‘‘எனது அம்மா கிம்மிற்கு திடீரென நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியுவில் அவர் இருப்பதால், அம்மாவுக்கு உதவியாக மருத்துவமனையிலேயே இருக்கிறேன். இது பற்றி கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். ஆனால் உண்மை என்ன என்பது தெரியாமல், மற்றவர்கள் பேசுவது வருத்தமாக இருக்கிறது’’ என்றார். மருத்துவமனையில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related Stories: