4வது முறை இணைந்த பாலகிருஷ்ணா, பொயப்பட்டி ஸ்ரீனு

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பாலகிருஷ்ணா, இயக்குனர் பொயப்பட்டி ஸ்ரீனு ஆகியோர் 4வது முறையாக இணைந்து பணியாற்றும் தெலுங்கு படத்தின் தொடக்க விழா வரும் 16ம் தேதி நடக்கிறது. எம்.தேஜஸ்வினி நந்தமூரி வழங்க, 14 ரீல்ஸ் பிளஸ் சார்பில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்காலிகமாக ‘பிபி4’ என்று பெயரிட்டுள்ளனர். இதற்கு முன்பு பொயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’, ‘அகண்டா’ ஆகிய படங்களில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். தற்போது உருவாகும் படத்தை சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன், மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

The post 4வது முறை இணைந்த பாலகிருஷ்ணா, பொயப்பட்டி ஸ்ரீனு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: