நிலக்கோட்டை மாரியம்மன் பூப்பல்லக்கில் பவனி : திரளான பக்தர்கள் தரிசனம்

வத்தலக்குண்டு: நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி அம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிலக்கோட்டையில் நூற்றாண்டு கண்ட மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 5 நாட்களாக நடந்தது. பூச்சொரிதல், அம்மன் சிம்ம வாகனத்தில் உலா, அக்னிசட்டி, பொங்கல், மாவிளக்கு, வாழைப்பழ சூறை உள்பட பல்வேறு வைபவங்கள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மன் பூப்பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியே உலா வந்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மேனேஜர் சுசீந்திரன் நிர்வாகிகள் பாண்டியராஜன், ஜெய்பாண்டியன், சுரேஷ் பாபு, கருமலைப் பாண்டியன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: