துறையூர்: துறையூர் கரட்டுமலை பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. துறையூர் திருச்சி சாலையில் கரட்டுமலை பாலதண்டாயுதசுவாமி முருகன் கோயிலும், அதன் அருகில் பத்துமலை முருகன் கோயிலும் உள்ளது. நேற்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் உச்சிகால கட்டபூஜையாக திருநீறு அலங்காரம், சந்தன அலங்காரம் மற்றும் பால், தயிர், மஞ்சள் அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.