திருமயம்: திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி விழாவில் திரளான பெண்கள் கலந்த கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருமயம் அருகே உள்ள தே.பூவம்பட்டியில் முளைப்பாரி எடுக்கும் திருவிழா நடந்தது. இதற்காக தே.பூவம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த வாரம் மதுபோடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெண்கள் மண்பானை, குடத்தில் மண் நிரப்பி மொச்சை, சோலம், தட்டைப்பயிறு, நெல் உள்ளிட்ட தானியங்களை முளைக்க வைத்தனர்.