பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி: மற்றொருவர் படுகாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு காந்திபேட்டை பகுதியில் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சானியா சாபர்(29), பிட்டு குமார்(25) ஆகியோர் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தங்கி மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வேலை முடிந்து மண்ணூர் பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு அருந்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சானியா சாபர் ஓட்டினார். பிட்டு குமார் பின்னால் அமர்ந்து சென்றார். அவர்கள் திருவள்ளூர் அடுத்த மப்பேடு சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சானியா சாபர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த பிட்டு குமாருக்கு கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. இதை கண்ட அங்கிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்படி மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி: மற்றொருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: