பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியாக அமைந்த எரிச்சலூட்டும், ஆத்திரமூட்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை கூறிய பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் அசிம் முனீர் அதிபர் டிரம்புடன் மதிய உணவு சாப்பிட இருக்கிறார். அரசாங்க தலைவராக இல்லாத ராணுவ வீரர் அதிபர் டிரம்புடன் சிறப்பு தனிப்பட்ட மதிய உணவுக்கு அழைக்கப்படுகிறார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு. ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த அதே பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு எப்படி ஒரு அற்புதமான கூட்டாளியாக மாறுகிறது? ஒரு குற்றவாளியை கூட்டாளி என்று அழைப்பது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு மற்றொரு பின்னடைவாகும்” என்றார்.
பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரசுக்கும் அதன் விமர்சன படைக்கும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெள்ளத் தெளிவாக விளக்கியதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரசின் ஒவ்வொரு பொய்யும் முறியடிக்கப்பட்டு விட்டது. இனியும் அக்கட்சி நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் அது பாகிஸ்தானின் கூட்டாளியாக கருதப்பட வேண்டும்’’ என்றார்.
The post அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசியது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி விளக்க வேண்டும்: காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.
