இயந்திரங்களை திருடிய 2 பேர் கைது ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும்

ஆரணி, ஏப்.22: ஆரணி அருகே ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை திருடிச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆரணி அடுத்த இரும்பேடு கிராமம் அருகே வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது மகன் பாலாஜி(27). அதே பகுதியில் ஹலோபிளாக் கற்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி பாலாஜி வழக்கம்போல் ஹலோபிளாக் கற்களை உற்பத்தி செய்துள்ளார். மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது ஹலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் 2 இயந்திரங்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில், ஆரணி அடுத்த சேவூர் பைபாஸ் சாலையில் தாலுகா இன்ஸ்பெக்டர் கார்த்திக்கா, எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பாலாஜியின் ஹலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை திருடிச்சென்றவர்கள் என்பதும், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோக்குமார்(25), வினோத்(20) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post இயந்திரங்களை திருடிய 2 பேர் கைது ஹாலோபிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் appeared first on Dinakaran.

Related Stories: