நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு பாளையங்கோட்டை போலீசார் சம்மன்!!

நெல்லை: நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு பாளையங்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்காவிற்கும், கோயம்புத்தூரை சேர்ந்த யுவராஜ் என்பவரது மகன் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாக கனிஷ்கா தனது தாயுடன் வருகை தந்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கணவர் பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கனிஷ்கா பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில்,நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு பாளையங்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரதட்சணை புகார் தொடர்பாக பல்ராம் சிங் வரும் 21ம் தேதி நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையிடப்பட்டது.

The post நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு பாளையங்கோட்டை போலீசார் சம்மன்!! appeared first on Dinakaran.

Related Stories: