மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் அதிமுக கூட்டணியில் சேரப் போவதாக கூறுகிறீர்கள். அதெல்லாம் நாங்கள் எப்படி சொல்ல முடியும்? மக்கள் களம் நன்றாக இருக்கிறது. எங்களின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோழமையை கொண்டு வந்து தேர்தலில் சேர்த்து, அரவணைத்துச் செல்வார். அவர் சொல்வதுதான் எங்கள் வேதவாக்கு.
விஜய்யை அடிபணிய வைக்க பாஜ முயற்சி செய்வதாக கேட்கிறீர்கள். அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க… இதெல்லாம் மேலிடத்து விவகாரம். அதைப் போய் எங்களிடம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடோ, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடோ எதுவுமே இல்லை. வண்டிகள் எல்லாம் போய்க்கொண்டு இருக்கிறது. எல்லோருக்கும் சமையல் காஸ் கிடைக்குது. இவ்வாறு அவர் கூறினார்.
