காதலனுடன் ஓடிச்சென்ற பட்டதாரி பெண் ஆணவக்கொலை பூட்டிய கழிவறைக்குள் சடலம் வீச்சு: தந்தை அதிரடி கைது

பாட்னா: பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்தவர் முகேஷ்சிங். இவரது மகள் சாக்‌ஷி. 25 வயது பட்டதாரி பெண். கல்லூரியில் படிக்கும் போது பக்கத்து வீட்டை சேர்ந்த சக மாணவனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வேறு சாதியினர். இதனால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மார்ச் 4ம் தேதி சாக்‌ஷி தனது காதலனுடன் டெல்லி சென்றுவிட்டார். அங்கு அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இதை அறிந்த முகேஷ்சிங், தனது மனைவியின் தம்பி விபின் குமாரை அனுப்பி கடந்த ஒருவாரத்திற்கு முன்பு சாக்‌ஷியை அழைத்து வந்தார். இந்நிலையில், வீட்டில் பூட்டி வைத்து இருந்த குளியல் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த போலீசார் குளியல் அறையை உடைத்து பார்த்த போது அங்கு சாக்‌ஷி படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டனர். மகளை ஆணவக்கொலை செய்ததாக முகேஷ்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

The post காதலனுடன் ஓடிச்சென்ற பட்டதாரி பெண் ஆணவக்கொலை பூட்டிய கழிவறைக்குள் சடலம் வீச்சு: தந்தை அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: