சிலை கடத்தல் எப்.ஐ.ஆர் காணாமல் போன விவகாரம்; மே.2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புனாய்வு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், சிலை கடத்தல் கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்கையும் ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை வேண்டும். மேலும் அதுகுறித்த அறிக்கையை மார்ச் மாதம் இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ஐ.பி.எஸ் அதிகாரி திஷா மிட்டல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். எனவே அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.இதையடுத்து மனுதாரரான யானை ராஜேந்திரன், இந்த வழக்கானது முன்னதாகவே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருவதால், அதிகப்படியான கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மே.2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மே.9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post சிலை கடத்தல் எப்.ஐ.ஆர் காணாமல் போன விவகாரம்; மே.2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: