இரட்டை இலை சின்ன விவகாரத்தில் இறுதி விசாரணையைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!!

டெல்லி : இரட்டை இலை சின்ன விவகாரத்தில் இறுதி விசாரணையைத் தொடங்கியது தேர்தல் ஆணையம். இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக பயன்படுத்த தடை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலையை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி ஒபிஎஸ் தொடர்ந்த மனு உள்பட 15 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரியில் அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு வாதத்தை தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்தனர். இறுதி விசாரணையை முடித்து விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

The post இரட்டை இலை சின்ன விவகாரத்தில் இறுதி விசாரணையைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!! appeared first on Dinakaran.

Related Stories: