இளநீர் கூடுகளை அகற்ற கோரிக்கை

 

சிவகங்கை, ஏப். 5: மாவட்டத்தில் இளநீர் கடைகள் அதிகளவு உள்ளன. இக்கடைகளில் மக்கள் அருந்தி விட்டு போடும் இளநீர் கூடுகளை கடைக்காரர்கள் சாலையோரங்களில் வீசிச் சென்று விடுகின்றனர். அங்கு இளநீர் கூடுகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. தூக்கி வீசப்பட்ட இளநீர் கூடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உண்டாகி உள்ளது.

இதனால் டெங்கு போன்ற கொசுக்களால் உருவாகும் நோய்கள் ஏற்படும் சூழல் உண்டாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் இளநீர் கூடுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இளநீர் கூடுகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: