தூத்துக்குடி, ஏப். 9: தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வீடு புகுந்து பைக், பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (22). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், பிரகாசின் நண்பரான கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த முத்துசிவா (23) என்பவரை தேடி அண்குமார் உள்பட 7 பேர், அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர் அங்கு இல்லாததால் அவரது பைக் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து முத்து சிவா அளித்த புகாரின் பேரில் வடபாகம் எஸ்ஐ சிவக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். மேலும் அருண்குமார், தாளமுத்துநகர் ராம்தாஸ் நகர் சுடலை (25), கந்தசாமிபுரம் கரன் (24), சுந்தரவேல்புரம் கார்த்திக் (20), வேப்பலோடை நடராஜபுரம் தங்கமாரியப்பன் (26), சுந்தரவேல்புரம் செல்வமணி (20), சுந்தரவேல்புரம் வீரமணி (26) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் மீதும் பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post தூத்துக்குடியில் வீடு புகுந்து பைக், பொருட்களை நொறுக்கிய 7 பேர் கைது appeared first on Dinakaran.