உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

ராமநாதபுரம் ஏப்.5: ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி தன்னார்வ இயக்கங்கள், ஆதிதிராவிட நலத்துறையுடன் இணைந்து ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெற உள்ளது.

மேற்படி உயர்கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். என தெரிவித்துள்ளார்.

 

The post உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: