திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 22ம் தேதி கன மழை பெய்தது. இதன் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணம் கருதி கடந்த 22ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.
நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது. இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பின் இன்று(மார்ச் 26) காலை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
The post மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! appeared first on Dinakaran.