காந்திகிராம பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம்

நிலக்கோட்டை, மார்ச் 13: சின்னாளபட்டி அருகேயுள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை சார்பில் பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதிவியுடன் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநதம் தலைமை வகித்தார். கல்வியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பக்தவற்சல பொருமாள் முன்னிலை வகித்தார். கல்வியியல் துறை தலைவர் தேவி வரவேற்றார். இதில் கல்வியியல் துறை முதுநிலை பேராசிரியர் ஜாஹிதா பேகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மற்றும் பேராசிரியர்கள், கல்வியல் துறை சார்ந்த வல்லுநர்கள், மாணவ- மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். கல்வியியல் துறை இணை பேராசிரியர் தேவகி நன்றி கூறினார்.

The post காந்திகிராம பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: