வைப்பு நிதியாக போடப்பட்ட 5 கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியினை 2007ம் திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்- பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக வழங்கப்படுகிறது.
2005ம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 19 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post கலைஞர் கருணாநிதி அறக்கட்டளையில் இருந்து 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.
